Skip to main content

Posts

அரசியல், அவியல், அண்ணாமலை - ஒரு சங்கியின் பார்வையில்...

அரசியல், அவியல், அண்ணாமலை - ஒரு சங்கியின் பார்வையில்... செல்வி ஜெயலலிதா இருந்த வரைக்கும் எப்போதும் அதிமுக கூட்டணிக்குத்  தான் ஓட்டுப் போட்டிருக்கிறேன். 1996’ல் ரஜினி குரல் கொடுத்த போது ஜெ செய்த செயல்களால் சற்று முகம்சுளித்தாலும் அப்போதும் கூட அம்மாவிற்குத் தான் ஓட்டுப் போட்டேன். தமிழகத்தில் நாத்திகம், தேச விரோத,  ஹிந்து துவேஷம், குறிப்பாகப் பிராமணத் துவேஷம் செய்யும் கட்சிகளுக்கு நான் எப்போதும் நான் ஓட்டுப் போட்டதில்லை என்று கூறிக்கொள்வதில் எனக்கு எந்தத் தயக்கமும் இல்லை. ஏன் என்றால் நான் ஒரு சங்கி!  ஜெ என்னை வசீகரித்த தலைவர். ஒரு பெண் என்றும் பாராமல் பத்திரிக்கைகள், அரசியல் கட்சித் தலைவர்கள் அவரை ஆபாசமாகத் தூற்றி பத்திரிக்கை அட்டைப் படத்தில் கேவலமாகச் சித்தரித்த போது அவர்களை ஒரு பெண் சிங்கமாக எதிர்கொண்டார். தமிழர் வீரம், ஜல்லிக் கட்டு என்று வீரம் பேசுபவர்கள் கூட, தங்களால் ஒருவரை வீழ்த்த முடியவில்லை என்றால் உடனே அவர்கள் கையில் எடுக்கும் ஆயுதம் வேலோ கத்தியோ இல்லை. பிராமணர்கள் என்றால் அவர்களுடைய பூணூலும் குடுமியையும்,  மற்றவர்கள் என்றால் ஜாதி, இனம் அல்லது இருக்கவே இருக்கிறார்கள் குடும்பப்

ரோஜாவுடன் பார்த்தசாரதி

ரோஜாவுடன் பார்த்தசாரதி பல வருடங்களுக்கு முன் புகுந்த வீட்டுக்குள் காலடி வைக்கும் புதுமணப்பெண் போல் முகநூலில் நுழைந்த சமயம் திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் பன்னீர் ரோஜாவுடன் பிரமாதமாகக் காட்சி அளித்தார். யாரோ ஓர் அன்பர் அந்தப் படத்தைப் பகிர்ந்திருந்தார். படத்தை ஆராய்ந்ததில் ஓரத்தில் ’Vishnumayam’ என்று ஆங்கிலத்தில் எழுதியிருந்தது. படத்தை யார் எடுத்தார் என்று விசாரித்தேன். யார் என்று தெரியவில்லை. பிறகு சில வருடங்கள் கழித்து ’Vishnumayam’ முகநூல் பதிவரிடம் “உங்கள் படங்கள் அருமை” என்று மெசேஜ் அனுப்பினேன். பதிலுக்கு “மிக்க நன்றி. உங்கள் எழுத்தை நான் விரும்பிப் படிப்பேன் என்றார்” பிறகு அவர் பகிரும் படங்களை ரசித்து “படங்கள் அருமை” என்று இரண்டு வார்த்தைப் பாராட்டுவேன். ஒரு நாள் இருவரும் தொலைப்பேசியில் பேசினோம். அப்போது அவரிடம் அந்த ரோஜா பார்த்தசாரதி படங்களைக் குறித்துச் சொன்னேன். அதைப் பெரிய அளவில் பிரிண்ட் செய்து அறையில் மாட்டிக்கொள்ள ஆசை என்றேன். சந்தோஷமாகக் கேட்டுக்கொண்டார். பிறகு பல வருடங்கள் அவ்வப்போது அவர் படங்களை ’லைக்’ செய்து அவருடைய தொடர்பைப் புதுப்பித்துக்கொண்டேன். சென்ற வருட

ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி

  ஸ்ரீமத் ஆசாரிய சப்தசதி பொன் கிடைத்தாலும் புதன் கிடைக்காது என்பார்கள். புதனும் இந்தப் புத்தகப் பொக்கிஷமும் சேர்ந்து இன்று கிடைத்தது. ஸ்ரீமத் ஆசாரியன் என்றால் அது நம் வேதாந்த தேசிகனே. சப்தசதி குழம்ப வேண்டாம் - எழு நூறு (சப்த ஸ்வரங்கள் ; சதம் அடித்தார்) சமூக ஊடக சத்ருக்கள் நிறைந்த இந்த அவசர உலகில் நமக்கு இது போன்ற புத்தகங்களைப் படிக்க நேரமும், கவனமும் இருப்பதில்லை. சமஸ்கிருதத்தில் இருந்தால் கேட்கவே வேண்டாம். அவை இரண்டு தலைமுறைக்கு முன்பே ‘extinct’ ரகங்களில் சேர்ந்துவிட்டது. ஸ்வாமி தேசிகனின் வாழ்கை வரலாற்றைச் சுமார் 700+ ஸ்லோகங்களில் ‘ஆர்யா சந்தஸ்.’ என்று சமஸ்கிருதக் கவிதைகளில் பயன்படுத்தப்படும் ஒரு குறிப்பிட்ட சந்தஸ் எழுதப்பட்டது. தமிழில் வெண்பா போன்று மன்னார்குடி ஸ்ரீ உவே.கோபாலசாரியார் 118 வருடங்களுக்கு முன் எழுதியுள்ளார். இந்த 700 ஸ்லோகங்களுக்கும் எளிய ஆங்கிலத்தில் பேராசிரியர் ஸ்ரீ.உ.வே வே.கண்ணன் ஸ்வாமியும், முனைவர் உ.வே. ஆர். திருநாராயணன் அவர்களும் எழுதியுள்ளார்கள். முதல் ஸ்லோகத்தைப் படித்தேன். I worship Sri-Rama, (i) who is of black-complexion like a fresh water- bearing cloud, (ii

விஜய் அரசியல் பிரவேசம்

விஜய் அரசியல் பிரவேசம் விஜய் ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற குங்குமப் பொட்டு வைத்த மூன்று பக்க அறிக்கையில் பலர் ‘க்’ ‘ப்’ ‘த்’ என்று மெய்யெழுத்து ஆணியைப் பிடுங்கிக்கொண்டு இருக்கும் இந்த நேரத்தில் அவருக்கு வாழ்த்துச் சொல்லி சில விஷயங்களைப் பார்க்கலாம். குமுதத்தில் இவருக்கு என்ன தகுதி இருக்கிறது என்ற ரீதியில் வந்த சினிமா விமர்சனம் நினைவுக்கு வருகிறது. அதிலிருந்து விஜய் எட்டியிருக்கும் உயரம் மிக அதிகம். சமீபத்தில் நல்ல பாரு நான் தான் கழுகு என்று அடையாளப்படுத்திக்கொள்ளும் அளவுக்கு உயர்ந்தார். பருந்து காக்கை ஆகாது என்ற பழமொழியை மாற்றினார். பல காலம் hibernation இருந்துவிட்டு, படம் வெளியாகும் தறுவாயில் கலக்‌ஷன் அரசியல் பேசாமல், விஜய் களத்தில் செய்துகொண்டு இருந்த செயல்களில் 100% அரசியல் இருந்தது. அவர் அரசியலில் காலடி வைக்கவில்லை என்றால் தான் ஆச்சரியப்பட வேண்டும். ஆனால் தன் மார்க்கெட் உயரத்தில் இருக்கும் இந்தச் சமயத்தில் இனி முழு நேர அரசியல் என்று வந்திருப்பது எல்லோருக்கும் ஆச்சரியத்தைக் கொடுத்திருக்கிறது. சரியான முடிவோ இல்லையே ஆனால் நிச்சயம் துணிச்சலான முடிவு. கறுப்பு, கருப்பு எது சரியான சொல் என்ற

நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள்

நம் கூரத்தாழ்வான் - சில குறிப்புகள் இன்று ஸ்ரீ கூரத்தாழ்வான் திருநட்சத்திரம். ஆழ்வானைப் பற்றி சில விஷயங்களை இங்கே உங்களுடன் பகிர்கிறேன். கூரத்தாழ்வானே நம் முன்மாதிரி ஸ்ரீ வைஷ்ணவத்தில் யாரை ’ரோல் மாடலாக’ கொள்ள வேண்டும் என்று ஒரு கேள்வி கேட்டால் கண்ணை மூடிக்கொண்டு கூரத்தாழ்வான் என்று பதில் சொல்லலாம். பெரியாழ்வார் திருமொழியில் வரும் 'பலசுருதி' (பலன்) சொல்லும் பாசுரம் இது ஆயர் குலத்தினில் வந்து தோன்றிய அஞ்சன வண்ணன்தன்னை தாயர் மகிழ ஒன்னார் தளரத் தளர்நடை நடந்ததனை வேயர் புகழ்விட்டு சித்தன் சீரால் விரித்தன உரைக்க வல்லார் மாயன் மணிவண்ணன்தாள் பணியும் மக்களைப் பெறுவார்களே. இந்தப் பாசுரங்களைச் சொன்னால் மாயனான மணிவண்ணன் திருவடிகளை வணங்க வல்லப் பிள்ளையை மகனாகப் பெறுவார்கள் என்கிறார். இந்த மாதிரி ஒரு மகனைத் தான் பெற்றார் ஆழ்வானுடைய தந்தையார். ஏன் என்பதற்கு ஓர் எடுத்துக்காட்டு சொல்லுகிறேன். ஆழ்வானின் சிறுவயதில் அவருடைய தாயார் பரமபதம் அடைந்தாள். ஆழ்வானைப் பார்த்துக்கொள்ள அவருடைய தந்தை மறுமணம் செய்து கொள்ள எண்ணினார். ஏறக்குறைய அது நடக்கும் சமயம், ஆழ்வானைப் பார்த்தார் அவருடைய தந்தை. எல்லா ஸ்ரீ

ஸ்ரீ தியாகராஜர் சில குறிப்புகள்

 ஸ்ரீ தியாகராஜர் சில குறிப்புகள் சில வருடங்கள் முன் தியாகராஜரும் ஸ்ரீரங்கமும் பற்றி  படித்த போது சில குறிப்புகளை எழுதினேன்.  ஸ்ரீதியாகராஜருடைய ஜாதகத்திலிருந்து அவருடைய பிறந்த நாளை நிர்ணயிக்க முடிகிறது.  தாய்க்கு நன்கு பாட தெரியும். புரந்தரதாஸரின் பாட்டுக்கள் பலவற்றை அவர் கற்று வைத்திருந்தார். மகாராஜாவுக்கு தியாகராஜர் ஸ்லோகம் வாசிக்க இவருடைய தந்தை பொருளை விளக்குவார். இதனால் ஸ்ரீராமாயணம் இவர் மனதில் நன்கு பதிந்துவிட்டது.  தியாகராஜரின் பல வாழ்க்கை குறிப்புகள் அவர் பாடலின் மூலமே நமக்குக் கிடைக்கிறது. எளிய வாழ்க்கை, உயர்ந்த நோக்கு ( simple living, high thinking ) அதனால் பக்தியும், தொண்டும் அவருக்கு வந்ததில் ஆச்சரியப்பட ஒன்றும் இல்லை.   தியாகராஜர் பக்தி என்பது விவரிக்க முடியாதது. பக்திக்கு முன் ecstasy என்ற வார்த்தையை போட்டுக்கொள்ள வேண்டும்.  உஞ்சவ்ருத்தியின் மூலமாக உப்பு முதல் கற்பூரம் வரை அவர் வாழ்க்கைக்குத் தேவையான எல்லாவற்றையும் சேகரித்ததாக மாளவஸ்ரீ ராகத்தில் ‘என்னாள்ளு திரிகேதி’ என்ற கீர்த்தனையில் அவரே கூறுகிறார்.  இவருக்கு 18வது வயதின் போது, காஞ்சிபுரத்திலிருந்து ஹரிதாஸ் என்ற ஒருவர் இவ

Oh! coronated king of Ayodya !

Oh! coronated king of Ayodya ! I find myself grappling with the challenge of deciding where to begin. The surge of emotions, unchecked since the consecration of "Ram Lalla" in the new temple, has left me in a contemplative state. To embark on this journey, I'll start by recounting my initial visit to Ayodhya. On October 10th, 2017, as I travelled by bus, a loud announcement stirred me awake, declaring, "Ayodhya has come." The distant sounds of Ram bhajans and the sight of a few monkeys in the dim light accompanied my awakening. As I fully emerged, the enchanting view of the sun-kissed River Sarayu awaited me. The name Ayodhya, translating to "beauty that cannot be described," was aptly defined by Sri Vedantha Desikan in his ‘Garuda Panchasat’, likening the sight of Periya Thiruvadi's (Garudan) thiruvadi to a beauty that can never be won. Previously, the term "Ram Janma bhoomi" associated with Ayodhya instilled a small nervousn