Skip to main content

Posts

சித்திர ராமாயணத்தின் சரித்திரம்

 சித்திர ராமாயணத்தின் சரித்திரம்  ’அந்தக் கால’ விகடன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் திருப்திப்படுத்தும். பல வருடங்களாக அதில் பிஸ்ரீ எழுதிய சித்திர ராமாயணம் படிக்க வேண்டும் என்று மிகவும் ஆவல். பல பழைய புத்தகக் கடை, வாட்ஸ்ஆப் குழுக்கள் என்று பல வருடங்களாக தேடி அலைந்தேன். அந்த நூலைக் குறித்துச் சிறு குறிப்பு  பி. ஸ்ரீநிவாச்சாரி என்ற பி.ஸ்ரீ 1944 - முதல் 1957 வரை 13 வருடங்கள் தொடர்ந்து கம்ப ராமாயணத்தை ’சித்திரலேகா’வின் ஓவியங்களுடன் வெளிவந்தது. சில பக்கங்களைத் திரு பசுபதி அவர்களின் வலைப் பதிவில் படித்த போது என்னைப் போலவே அவரும் தேடிக்கொண்டு இருக்கிறார் என்று அறிந்து. அவரிடம் எங்கே கிடைக்கும் என்று கேட்டதற்கு  ”கிட்டாது ! பல வருடங்களாகக் கேட்டுக் கொண்டிருக்கிறேன்....  வர்த்தமானன் விளம்பரம் கொடுத்தனர்... பிறகு வரவில்லை.... 'சக்தி' விகடன் சுருக்கி வெளியிடத் தொடங்கியது.... பிறகு ஆரண்யக் காண்டத்துடன் நின்று விட்டது... நானும் கேட்டுச் சலித்து விட்டேன்.... என்னிடம் இருந்த சில அத்தியாயங்களை வெளியிட்டு விட்டேன். ....உங்களுக்கு வர்த்தமானனில் யாரேனும் தெரிந்தால்.... கேட்டுச் சொல்லுங்கள் ...”

இனிய இராமானுச நூற்றந்தாதி

இனிய இராமானுச நூற்றந்தாதி ( கீழே வரும் இனிய இராமானுச நூற்றந்தாதி  108 பாசுரங்களின் சரமாக, ஒவ்வொரு வரியிலும் ‘இராமானுசன்’ என்ற வார்த்தையுடன் கிட்டதட்ட அந்தாதி சாயலில் இருக்கும். பிழைகளை பொறுத்தருள வேண்டும்) 1. அலர்மேல்மங்கை உறையும் மார்பனைப் பாடிய நம்மாழ்வாரின் திருவடிகளைப் பற்றிய இராமானுசனின் நாமங்களைச் சொல்லு உள்ளமே! 2. உள்ளத்தில் திருமங்கை ஆழ்வாரை வைத்திருக்கும் இராமானுசனின் சீல குணத்தை அறிந்துகொள் மனமே! 3.  மனமே! இதை அறிந்துகொண்டால் இராமானுசனின் அடியவர்களுக்குத் தொண்டு செய்யும் பேறு கிடைக்கும் 4. கிடைத்த பேறு ராமானுஜரின் திருவடி அதனால் திருமாலுடைய திருவடி அருள் பெற்று குறைகள் நீங்கும். 5. குறைகள் நீங்க நமக்குக் கிடைக்கும் இராமானுசன் என்ற பெரும் செல்வம் 6. பெரும் செல்வமான இராமானுசனைப் பற்றிய நூற்றந்தாதியை நாம் பக்தியுடன் பாடுவோம் தமிழ் மொழியில் 7. மொழிகளைக் கடந்த புகழுடைய கூரத்தாழ்வானின் திருவடிகளைப் பற்றினால் செருக்கு குழியில் விழாமல் தப்பிவித்து மேலும் இராமானுசனின் புகழ் பாடி இருள் நீங்கும் நம் மனத்தில். 8. மனத்தில் எப்போதும் பொய்கை ஆழ்வாரை வைத்திருக்கும் இராமானுசனே என் ஞான ஒளி விள

தான் உகந்த திருமேனி

தான் உகந்த திருமேனி எம்பெருமானார் ஸ்ரீரங்கத்தில் கத்யத்ரயம்  சாதித்து, கோயிலில் பல மாறுதல்களைச் செய்து உயர்ந்து நின்ற சமயம். ஸ்ரீரங்கத்தில் சிலருக்கு அவர் இது மிகுந்த பொறாமையையும், எரிச்சலையும் கொடுத்தது. அந்த அசுயை அவர்களைக் கொலை செய்யவும் தூண்டியது. அவரது மாதுரகத்தில் விஷம் கலந்து கொடுக்க அதிலிருந்து தப்பினார். அமைதியாக நஞ்சு கலந்த அன்னத்தைத் திருக்காவேரியில் கரைத்து உபவாசம் மேற்கொண்டார். இதைக் கேள்விப்பட்ட திருக்கோட்டியூர் நம்பி உடனே திருவரங்கம் விரைந்தார். தனக்கு உபதேசம் செய்த ஆசாரியரை எதிர்கொண்டு அழைக்க காவேரிக் கரைக்கு எழுந்தருளினார் எம்பெருமானார். கொதிக்கும் வெயிலில் கொதித்துக்கொண்டு இருந்த மணலில் நம்பிகள் திருவடிகளிலே தண்டம் சமர்ப்பித்தார். ஆசாரியன் “எழுந்திரு” என்று சொல்லும் போது தான் எழுந்திருக்க வேண்டும் என்பது மரபு. ஆனால் நம்பியோ ஒன்றும் சொல்லாமல் அப்படியே இருக்க அங்கிருந்த கிடாம்பி ஆச்சான் “ஐயோ இது என்ன ஆசாரிய சிஷ்ய லட்சணம் ? நெருப்பில் இட்ட இளந்தளிர்போல சூடு மணலில் கிடக்க அதைப் பார்த்துக்கொண்டு இருக்க முடியுமா ? “ என்று ஓடிப் பரிவுடன் அவரைத் தூக்கிவிட நம்பி “ஆச்சான், உம்ம

தானான திருமேனி

தானான திருமேனி  ஸ்ரீராமானுஜர் பல திவ்வியதேசங்களுக்குச் சென்றிருந்தாலும், அவர் பல ஆண்டுகள் எழுந்தருளியிருந்தது ஸ்ரீரங்கத்தில் தான். ஸ்ரீபெரும்புதூர்/காஞ்சி அவருடைய பிறந்த வீடு என்றால், ஸ்ரீரங்கம் அவர் புக்ககம் என்று கொள்ளலாம். ”தென்னரங்கர் செல்வம் முற்றும் திருத்தி வைத்தான் வாழியே” என்கிறது வாழி திருநாமம். கோயிலில் பல சீர்திருத்தங்களைச் செய்து ”ராமானுஜார்ய திவ்யாஜ்ஞா” என்று இன்றும் அதை நாம் அதைப் போற்றிக்கொண்டு இருக்கிறோம். ஸ்ரீராமானுஜரை எதிர் கொண்டு அழைத்து ‘உடையவர்’ என்ற திருநாமம் கிடைத்த இடம் திருவரங்கம்.   ஆயிரம் கால் மண்டபம் பல விசேஷங்களைக் கொண்டது. வைகுண்ட ஏகாதசி அன்று பரமபத வாசல் வழியாக நம் பெருமாள் ஆழ்வார்கள், புடைசூழ வீற்றிருக்கும் மண்டபம். எதிரே உடையவர் தானான திருமேனி சன்னதி.  ஸ்ரீராமானுஜர் பரமபதித்த பின்பு அவர் ஸ்ரீரங்கத்திலேயே அதுவும் கோயிலுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதற்காகப் பெரியபெருமாள் தம்முடைய வசந்த மண்டபத்தையே கொடுத்து அங்கேயே அவருடைய சரம திருமேனியை திருப்பள்ளிப்படுத்த நியமித்தார்.  ஸ்ரீராமானுஜர் திருப்பள்ளிப்படுத்தப் பெற்ற இடமே(பிருந்தாவனம்) தற்போது உடையவர் சன்னதி

தான் உகந்து, தமர்களுக்கு அளித்த திருமேனி !

தான் உகந்து, தமர்களுக்கு அளித்த திருமேனி ! சிறு வயதில் என் அப்பா ஸ்ரீராமானுஜருடைய மூன்று முக்கியமான திருமேனி குறித்து அடிக்கடி சொல்லுவார். சுவாரசியமாக இருக்கும் . அந்த மூன்று திருமேனிகளின் படத்தை ஒன்றாக ஃபிரேம் போட்டு அதற்குக் கீழே  1 தமர் உகந்த(மேல்கோட்டை என்ற திருநாராயணபுரம்),  2 தான் உகந்த(ஸ்ரீபெரும்புதூர்),  3 தான் ஆன திருமேனி(ஸ்ரீரங்கம்) என்று எழுதி மாட்டியிருந்தேன்.  மேல் உள்ள வரிசைப் படி உடையவரின் திருமேனிகளை நமக்குக் கிடைத்தது. அதாவது முதல் திருமேனி மேல்கோட்டை, அடுத்து ஸ்ரீபெரும்புதூர், பிறகு ஸ்ரீரங்கம்.  இந்தப் பெயர்கள் எல்லாம் கொஞ்சம் குழப்பும். நினைவு வைத்துக்கொள்ளச் சுலபமான வழி ‘தமர்’ என்ற வார்த்தையைப் பிடித்துக்கொள்ளுங்கள்.  முதல் திருவந்தாதியில் ‘தமர் உகந்தது எவ்வுருவம் அவ்வுருவம் தானே’ என்று பொய்கையாழ்வார் கூறுகிறார். ‘தமர்’ என்றால் அன்பர்கள்/அடியார்கள் என்று பொருள். ஸ்ரீராமானுஜர் மேல்கோட்டையிலிருந்து ஸ்ரீரங்கத்திற்குப் பயணமாவதற்கு ஆயத்தமான போது அவருடைய சீடர்கள் ஸ்ரீராமானுஜரைப் பிரிய வேண்டுமே என்று வருத்தமுற்றார்கள். ‘தேவரீரைப் பிரிந்து எப்படி நாங்கள் வாழ்வது? எங்களையும்

அயோத்தி ஸ்ரீராம் லல்லா தரிசனம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்

அயோத்தி தரிசனம் - அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள் அடியேனின் ஆசாரியரான 46ஆம் பட்டம் ஸ்ரீமதழகியசிங்கர் இந்தக் குரோதி வருடத்தில் நல்லதே நடக்கும்; எல்லாவிதமான மனோரதங்கள் நிறைவேறும்… என்று அருளாசி வழங்கிய அதே வாரம் அயோத்தியா சென்று வந்தேன்.  வந்தவுடன், உற்றார் உறவினர்கள் எல்லோரும் அணிநகர் அயோத்தியில் குழந்தை ஸ்ரீராமர் சௌக்கியமா என்று கேட்கவில்லை,  ‘எப்படி சேவித்தீர்கள் ? திருப்பதி போலக் கூட்டமா ? தள்ளிவிடுகிறார்களா ?’  என்று வினவினார்கள்.  அதற்குக் காரணம் எல்லோருடைய மனோரதமும் அயோத்தி சென்று ஸ்ரீராம் லல்லாவை தரிசிக்க வேண்டும் என்பது தான். நம்  புண்ணிய பூமியான பாரதத் தேசத்தில் நம் வாழ்நாளில் அயோத்தியில் ஸ்ரீராமர் பிறந்த இடத்தில் அவருக்கு ஒரு கோயில் என்பது 500 வருட இந்தியர்களின் மனோரதம். சென்ற சோபக்ருத் ஆண்டு தை மாதம் 8 ஆம் நாள் (ஜனவரி 22ஆம் ) அன்று ப்ராணப் பிரதிஷ்டை (ஸம்ப்ரோக்ஷணம்) இனிதே நடைபெற்றது.  ஆண்டாளின் ‘மனத்துக்கு இனியான்’ வீற்றிருக்கும் கோயில், பாரத மக்களின் மனங்களைப் பூட்டிய ’மனோ’ரதமாக  ப்ராணப் பிரதிஷ்டை அன்று காட்சி அளித்தது. அதன் பின் குழந்தை ஸ்ரீராமரின் ஆச்சரியமான அர்ச்சாவதாரத் த

உங்கள் ஓட்டு யாருக்கு ?

உங்கள் ஓட்டு யாருக்கு ? தமிழகத்தில் நாற்பது தொகுதிக்குத் தேர்தல் என்பதை மறந்து, கோவையில் அண்ணாமலை என்ற ஒற்றை மனிதரின் தேர்தலாகி கோவை இன்று பேசும் பொருளாகிவிட்டது. சில மாதங்களுக்கு முன் மோடி ராமேஸ்வரத்தில் போட்டியிடுவதாக இருந்தது. அவர் அங்கே போட்டியிட்டால் கூட இந்த மாதிரி ஓர் எதிர்பார்ப்பு இருந்திருக்குமா என்று தெரியவில்லை. மக்கள் மீது நம்பிக்கை வைத்து பணம் கொடுக்க மாட்டேன் என்று தைரியமாக அடித்துச் சொல்லுகிறார் அண்ணாமலை. அவருடைய அந்த நம்பிக்கையைக் கோவை மக்கள் தான் பூர்த்தி செய்ய வேண்டும். கோவை மக்கள் இன்று ஒட்டுமொத்த தமிழ்மக்களின் பிரதிநிதியாகவிட்டார்கள். நாளைய தமிழகம் நன்றாக விடிய இந்தியாவோ கோவையை எதிர்நோக்கியுள்ளார்கள். கோவையில் பாஜக என்ன நிகழ்த்துகிறதோ அதே தான் தமிழகம் முழுக்க 2026ல் புரட்சியாக வெடிக்கப் போகிறது. அந்த மாற்றத்தின் அலை கோவையிலிருந்து உருவாகக் காத்துக்கொண்டு இருக்கிறது. கோவை மக்கள் ஒவ்வொருவரும் தங்கள் மனசாட்சியைக் கேட்டு ஓட்டுப் போட்டாலே போதும் அண்ணாமலை வெற்றி பெற்றுவிடுவார். சமீபத்தில் ஒரு காணொளியைப் பார்த்தேன். அதில் ஒரு ”ஆட்டோ ஓட்டுநரிடம் உங்கள் ஓட்டு யாருக்கு?” என்

வழிகாட்டும் ஸ்ரீராமர்

வழிகாட்டும் ஸ்ரீராமர் காட்டிக்கொடுத்த காட்டுமன்னார் என்ற பதிவைப் படித்திருப்பீர்கள். அதற்குக் காரணம் ஸ்ரீரங்கம் கோதண்ட ராமர் தான்! ஸ்ரீராம நவமி அன்று இதை மீண்டும் சொல்லுவதில் மகிழ்ச்சி. ஆழ்வார்கள் மலர்ந்து அருளிய நாலாயிரத் திவ்யப் பிரபந்தம் முதல் பிரதியை உடையவர் திருநட்சத்திரம் அன்று அதை வெளியிடுவதற்கு முன் உறையூர் ஸ்ரீ கமலவல்லி நாச்சியார், ஸ்ரீரங்கம் தாயார், நம்பெருமாள் ஆசீர்வாதங்களைப் பெற்றுவிடலாம் என்று காரில் புறப்பட்டேன். உறையூரில் அர்ச்சகரிடம் “நாச்சியார் திருவடியில் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்ற போது அவர் ஆசையுடன் புத்தகங்களை நாச்சியார் திருவடியில் வைத்து தாயாரின் புஷ்பம், மஞ்சள் காப்பு பிரசாதங்களைப் புத்தகம் மீது அள்ளிக் கொடுத்தார். பிறகு அவதார ஸ்தலத்தில் விற்றிருக்கும் ஸ்ரீ திருப்பாணாழ்வார் சந்நிதி மற்றும் ஸ்ரீ நம்மாழ்வார், ஸ்ரீ உடையவர் மற்றும் நாச்சியார் வீற்றிருக்கும் மண்டபத்தில் புத்தகங்களை வைத்து வணங்கிவிட்டு வெளியே வந்த போது கோவிட் காலத்தில் வெளியே வரவே பயப்பட்டுக் கொண்டு இருந்த காலத்திலும் வெய்யிலில் பூக்களை விற்றுக்கொண்டு இருந்த பெண்மணியிடம் புத்தகங்களைக் கொடுத்து

காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்

காட்டிக்கொடுத்த காட்டுமன்னார்  பதம் பிரித்த நாலாயிர திவ்யப் பிரபந்தம் முதல் பதிப்பு முதல் பிரதியை காட்டுமன்னார் கோயில் ஸ்ரீமந் நாதமுனிகள் சந்நிதியில் வைத்து ஆசீர்வாதம் பெறச் சென்றிந்த போது ஓர் அனுபவம் ஏற்பட்டது. சுருக்கமாகச் சொல்லுகிறேன். கோவிட் இரண்டாம் அலை எங்கும் பரவியிருந்த  அன்று காலை ஒன்பது மணிக்கு காட்டுமன்னார் கோயிலில் வீரநாராயணப் பெருமாள் முன் நின்றேன். இங்கே தான் சுமார் 1200 வருடங்கள் முன் நாதமுனிகள் நாலாயிரத்தையும் அரங்கேற்றம் செய்தார் என்ற நினைப்பே உள்ளத்தில் ஆனந்தத்தையும் பூரிப்பையும் கொடுத்தது. காட்டுமன்னார் பெருமாள் திருவடிகளில் பிரபந்தப் புத்தகத்தை வைத்து அர்ச்சகர் “இவர் காட்டும் மன்னார். நாலாயிரத்தை நாதமுனிகளுக்குக் காட்டிக்கொடுத்த மன்னார். நாதமுனிகள் தினமும் ஆராதனை செய்த பெருமாள்…” என்று கூறி மன்னார் ஆசிர்வதிக்க அர்ச்சகரிடம் “நாதமுனிகள் திருவடிகளிலும் வைத்து ஆசீர்வாதம் வேண்டும்” என்றேன். “பெருமாள் திருவாராதனம், பிறகு கோஷ்டி முடிந்த பின் தான். நாழியாகும்” என்றார்.  அங்கே இருந்த ஸ்ரீநிவாசாச்சார் ஸ்வாமி (தீர்த்தம் ஸ்தானிகர் )  “உங்களுக்கு பெங்களூர் செல்லுவதற்கு நேரம் ஆகி

பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள்

 பதம் பிரித்த பிரபந்தம் சில கேள்வி பதில்கள் (1)  எங்கள் வீட்டில் ஏற்கனவே நாலாயிர திவ்யப் பிரபந்தம் புத்தகம் இருக்கிறதே ? இது பதம் பிரித்த பிரபந்தம்.  பதம் பிரித்த பிரபந்தமா ?  சுமாராகத் தமிழ் படிக்கத் தெரிந்தால் பயப்படாமல் படிக்கலாம். முயன்றால் பொருள் எளிதில் விளங்க ஆரம்பிக்கும். உதாரணமாக பெரியாழ்வார் திருமொழி பாசுரம் ஒன்றைப் பதம் பிரித்து/பிரிக்காமல் கொடுத்திருக்கிறேன். வித்தியாசத்தை நீங்களே பாருங்கள்.  சரி இதனால் என்ன பயன் ?  சுஜாதா கல்கியில் எழுதியதைப் படிக்க சிபாரிசு செய்கிறேன். (கீழே கொடுத்திருக்கிறேன்) ஆழ்வார் பாசுரங்களை ரசிக்க முதலில் பதம் பிரித்துக் கொள்ள வேண்டும். அது சில சமயம் எளிதாக இருக்கும். சில சமயம் ரொம்ப கடினமாக. தொண்டரடிப்பொடி ஆழ்வாரின் பாசுரங்கள் எளிமை ரகத்தைச் சேர்ந்தவை. நம்மாழ்வாரின் பாசுரங்களும் அப்படியே அவரது திருவிருத்தம் மட்டும் படுத்தும். உதாரணத்துக்கு இந்த 31வது பாசுரத்தைப் பாருங்கள். இசைமின்கடூதென்றிசைத்தாலிசையிலமென்றலைமே லசைமின்களென்றாலசையுங்கொலாமம்பொன்மாமணிக டிசைமின்மிளிருந்திருவேங்கடத்துவன்றாட்சிமய மிசைமின்மிளிரியபோவான்வழிக்கொண்டமேகங்களே. தலைகால் புரியவில்