Skip to main content

Posts

செல்லப் பிள்ளையும், செல்லமான பிள்ளையும்

செல்லப் பிள்ளையும், செல்லமான பிள்ளையும்  தினமும் காலை எழுந்தவுடன் பூலோக வைகுண்டமாம் ஸ்ரீரங்கம் இருக்கும் திசையை நோக்கி இரண்டு அடி வைக்க வேண்டும் என்பது பெரியோர்கள் வாக்கு. ஸ்ரீரங்கத்திலேயே இருப்பவர்கள் என்ன செய்ய வேண்டும்? கர்நாடகா இருக்கும் திக்கை நோக்கி இரண்டு அடி எடுத்து வைக்கவேண்டும். காரணம் திரு நாராயணபுரம் என்ற மேல்கோட்டை.  ஸ்ரீரங்கம் பெருமாளை ’நம்’ பெருமாள் என்று செல்லமாக அழைக்கிறோம். ஆனால் மேல்கோட்டை பெருமாளே ‘செல்ல’ப் பிள்ளை! இங்கே இருக்கும் பெருமாள் ’யதிராஜ’ சம்பத் குமாரன்.  இந்தப் பெயர்க் காரணத்தைச் சுருக்கமாகத் தருகிறேன்.  ஸ்ரீரங்கத்தில் உடையவருக்கு கிருமிக்கண்ட சோழனால் ஏற்பட்ட ஆபத்திலிருந்து தப்பி மேல்கோட்டை அடைந்தார். அங்கு வசித்த காலத்தில், ஒரு நாள் தம்மிடம் இருந்த திருமண் முழுவதும் செலவழிந்துவிட்டது.  வருத்தத்தில் இருந்த உடையவரின் கனவில் தோன்றிய பெருமாள், கல்யாணி புஷ்கரிணி அருகே ஒரு செண்பக மரத்தடியில், மரம் போல இருக்கும் பெரிய துளசிச் செடிக்கு அருகில் உள்ள புற்றுக்குள் தான் இருப்பதாகக் கூறி திருமண் கிடைக்கும் இடத்தையும் தெரிவித்தார். மறுநாள் காலை...

வாட் அன் ஐடியா சர்ஜி!

வாட் அன் ஐடியா சர்ஜி! பஹல்காம் தாக்குதலின் கொடூரம் விஷயம் - ஆண்களையும் பெண்களையும், இந்துக்களையும் முஸ்லிம்களையும், சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் மக்களையும் பிரித்துப் பொறுக்கி திடீர் என்று அடித்தது தான். கூடவே “உங்க மோடியிடம் போய் சொல்லு” என்று செய்தி அனுப்பினார்கள்.  இறந்த கணவர் அடிப்பட்டுக் கிடக்க, என்ன செய்வது என்று தெரியாமல் உட்கார்ந்து இருந்த அந்தத் தேன்நிலவு ஜோடியின் படம் எல்லோரையும் உலுக்கியது.  இந்தத் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா நிச்சயம் பதிலடி கொடுக்கும் என்று பாரத மக்கள் எல்லோரும் மோதி மீது நம்பிக்கை வைத்திருந்தார்கள். பீஹார்  அரசு சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பிரதமர் டிரம்ப் போன்றவர்கள் புரிந்துகொள்ள ஏதுவாக ஆங்கிலத்தில் சூளுரைத்தார். நம் எல்லோர் மனதிலும் அடிப்பார் என்று தெரியும் ஆனால் எப்போது? என்பது மில்லியன் டாலர் கேள்வியாக உறுத்திக்கொண்டு இருந்தது.  பொறுக்கி அடித்த அந்தப் பொறுக்கிகளுக்கு மோதி என்ன மாதிரி அதிர்ச்சி கொடுக்கப் போகிறார் என்பதை எல்லோரும் எதிர்பார்த்திருந்தனர். முதலில் நதி நீர் கிடையாது என்றார். உடனே எல...

(6) அழகனும், கோயில் அண்ணனும்

 (6) அழகனும், கோயில் அண்ணனும்  உடையவர் ஒரு சமயம் நாச்சியார் திருமொழி காலக்ஷேபத்தில்  நாறு நறும் பொழில் மாவிருஞ்சோலை நம்பிக்கு நான் நூறு தடாவில் வெண்ணெய் வாய்நேர்ந்து பராவி வைத்தேன்; நூறு தடா நிறைந்த அக்கார அடிசில் சொன்னேன் எறுதிருவுடையான் இன்று இவை கொள்ளுங்கொலோ ?’  என்ற பகுதி வந்த போது, சட்டென்று தன் சீடர்களுடன் திருமாலிருஞ்சோலைக்கு புறப்பட்டார்.  அங்கே அழகரைத் தொழுது நின்று, ஆண்டாளின் விருப்பம் போல் திருமாலிருஞ்சோலை அழகருக்கு நூறு தடா அக்கார அடிசிலும், வெண்ணெய்யும் சமர்ப்பித்தார். பின்பு ஸ்ரீ வில்லிபுத்தூர் சென்று ஆண்டாளை அடி பணிந்து நின்றார். தான் பாடியதைச் செயல் படுத்திய ஸ்ரீராமனுஜரின் செயலுக்கு உகந்து “வாரும் என் அண்ணலே” என்று அர்ச்சை குலைத்துக் கொண்டு முன்பே வந்த காரணத்தால் இன்றும் நமக்கு அதே நிலையில் சேவை சாதிக்கிறாள். இன்றும் அதனால் தான் ‘பெரும்பூதூர் மாமுனிக்கு பின்னானாள் வாழியே” என்று அநுசந்தாதித்து வருகிறோம்.  ஒரு முறை கிடாம்பி ஆச்சான் திருமாலிருஞ்சோலை அழகர் திருமுன்பே அகதிம் (கதியற்றவனை) என்று தொடங்கும் ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினத்தின் 48-...

(5) குருவான உடையவரும், சிஷ்யனான வைஷ்ணவ நம்பியும்

(5) குருவான உடையவரும், சிஷ்யனான வைஷ்ணவ நம்பியும் ஸ்ரீராமானுஜர் திக்விஜயமாக சென்ற போது திருக்குறுங்குடி அழகிய நம்பியைச் சேவித்து நின்ற போது, அழகியநம்பி அர்ச்சகரிடம் ஆவேசித்து “ராம, கிருஷ்ண’  என்று பல அவதாரங்களை எடுத்தும் என்னால் மக்களைத் திருத்த முடியவில்லை. ஆனால் நீரோ இக்குறுகியகாலத்தில் இத்தனை பேரையும் எப்படித் திருத்தினீர் ? அதன் ரகசியத்தைச் சொல்லும்” என்று கேட்க அதற்கு உடையவர் ”கேட்கும் அளவில் கேட்கப் பட்டால், சொல்லும் அளவில் சொல்லுவோம்” என்றவுடன் நம்பி உடனே தனது ஆசனத்தை விட்டுக் கீழே இறங்கி ஸ்ரீராமானுஜருக்கு ஓர் ஆசனம் போடச் சொல்லி அவரை ஆசாரப் பீடத்தில் அமர்த்தி, தான் கீழே சிஷ்யன் போல அமர்ந்தார். ராமானுஜர் தன் ஆசாரியனான பெரியநம்பி அதில் எழுந்தருளியிருப்பதாகப் பாவித்து பெருமாளின் திருச்செவியில் ’திருமந்திரம், ‘த்வய’ மஹா மந்திரங்களை உபதேசம் செய்தார். நம்பியும் கேட்டு உகப்படைந்தவராய் “நாம் இராமானுசனை உடையேன்” என்று அருளிச்செய்ய, எம்பெருமான், எம்பெருமானாரின் சிஷ்யர் ஆனார். ஸ்ரீராமானுஜர் அவருக்கு “ஸ்ரீவைஷ்ணவ நம்பி” என்று திருநாமம் அருளி, தம்முடைய அபசாரங்களைப் பொருத்தருள வேண்டும் என்ற...

(4) நம்பெருமாளும் நம்மிராமானுசனும்

 (4) நம்பெருமாளும் நம்மிராமானுசனும்  ஆலவந்தார் தன் வாழ்நாள் குறுகியுள்ளது என்பதை உணர்ந்து, இளையாழ்வாரை காஞ்சியிலிருந்து அழைத்து வாரும் என்று பெரியநம்பியை நியமித்தார். நம்பியும் காஞ்சிக்கு உடனே புறப்பட்டு,  ராமானுஜர் வரும் வழியில் ஆளவந்தார் அருளிய ஸ்தோத்திர ரத்தினத்தை இளையாழ்வார் காதில் விழுமாறு ஓதினார். அதில் பொதிந்துள்ள ஆழமான அர்த்த விஷேசங்களை அறிந்த ராமானுஜர் “இவை யார் அருளியது? அவரை நான் காண முடியுமா ?” என்று கேட்க, நம்பியும் “ஆளவந்தார் அருளியது, அவரை காண இப்போதே கிளம்பலாம் என்று அவரை அழைத்துக்கொண்டு திருவரங்கம் புறப்பட்டனர்.  ஆனால் பெரிய பெருமாளின் திட்டம் வேறாக இருந்தது. அந்தத் திட்டத்தை சற்று பார்க்கலாம்.  பெரிய நம்பியும், இளையாழ்வாரும் திருவரங்கம் நுழைய, ஆளவந்தார் பரம பதித்துவிட்டார் என்ற செய்தியை அறிந்து மனம் வருந்தினர். கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமல் போய்விட்டதே என்று இருவரும் புலம்பினர். அச்சமயம் இளையாழ்வார் ஆளவந்தாருடைய விரல்கள் மூன்று மடங்கியிருப்பதைக் கண்டு, அவருடைய ஆசைகளை நிறைவேற்றுவேன் என்று சபதம் செய்ய, மடங்கிய கைவிரல்கள் நிமிர்ந்தன. தன்னால் ஆ...

(3) அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல்

 (3) அப்பனுக்கு ஆழி சங்கு அளித்த அண்ணல் இன்று நினைத்தால் காலை புறப்பட்டு திருமலைக்குச் சென்று பெருமாளைச் சேவித்துவிட்டு மாலை வீடு திரும்பிவிடலாம்.  ஸ்ரீராமானுஜர் தன் வாழ்ந்த 120 வருடங்களில் திருமலைக்கு மொத்தம் மூன்று முறை தான் சென்றிருக்கிறார்!  ஸ்ரீராமானுஜரின்  திருமலை யாத்திரையால் தான் இன்று நாம் கோவிந்தா கோஷத்துடன் திருவேங்கடவனை க்யூவில் சேவிக்க முடிகிறது!  உடையவரின் முதல் யாத்திரையிலிருந்து தொடங்கலாம்.  ஸ்ரீரங்கத்தில் ஒரு நாள் உடையவர் திருவாய்மொழி காலட்சேபம் சாதித்துக்கொண்டு இருக்கிறார். “சிந்து பூமகிழும் திருவேங்கடம்” என்ற பாசுர வரிகளைப் படிக்கும் போது, அவர் கண்களில் நீர் வழிகிறது. சீடர்களுக்குப் புரியவில்லை. அதில் ஒருவர் “ஏன் கண்களில் கண்ணீர் ?” என்று கேட்க அதற்கு உடையவர் “வேங்கடத்து எழில்கொள் சோதி” என்று ஆழ்வார் பாடிய இந்தத் திவ்வியதேசத்தில் நித்தியப் புஷ்பக் கைங்கரியம் செய்ய இப்போது யாரும் இல்லையே! என்று வருத்தமாக இருக்கிறது.. உங்களில் யாரேனுமுண்டோ ?” என்று கேட்க அங்கே ஓர் அமைதி நிலவியது. அனந்தாழ்வான் எழுந்து ”அடியேனுக்கு நியமித்தருள வேண்டும்" என்றா...

சித்திர ராமானுஜர் - அறிவிப்பு

சித்திர ராமானுஜர் - அறிவிப்பு 2017ல் மேல்கோட்டை சென்றிருந்த போது ‘Academy of Sanskrit Researchல் பல ஓலைச்சுவடிகளுக்கு மத்தியில் ஸ்ரீராமானுஜரின் வாழ்கை வரலாற்றைச் சித்தரிக்கும் படங்கள் சிலவற்றைப் பார்த்தேன். அழுக்கு படிந்து அடுத்த மழைக்கு நாசமாகிவிடும் போல இருந்தது. அங்கே இருப்பவர்களிடம் மொத்தச் சரித்திரமும் இருக்கிறதா என்று கேட்டேன். சில படங்கள் தான் இருக்கிறது என்றார்கள்.  இது யாருடையது, எங்கே கிடைக்கும் என்று தேடி ஓய்ந்துவிட்டேன். பிறகு சமீபத்தில் அந்தப் படங்கள் கருப்பு வெள்ளையில் கிடைத்தது. ராமானுஜருடைய வாழ்கை வரலாற்றைச் சித்தரிக்கும் 108 படங்கள்.  இந்தப் படங்களை ‘ராமானுஜர் தேசிக முனிகள்’ அறக்கட்டளை மூலம் தமிழ், ஆங்கிலம், தெலுங்கு, கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் கொண்டு வர வேண்டும் என்று ஸ்ரீராமானுஜரின் 1008வது திருநட்சத்திரம் அன்று தோன்றியது. இதன் வேலைகளை இன்று முதல் எம்பெருமானாரின் ஆசிகளுடன் ஆரம்பிக்க இருக்கிறேன்.  புத்தகம் குறித்து மேலும் விவரங்களை அவ்வப்போது சொல்லுகிறேன்.  உடையவர் திருவடிகளே சரணம்  -சுஜாதா தேசிகன் சுஜாதாவின் 90வது பிறந்த தினம் 

(2) தேவராஜனும், யதிராஜனும்

(2) தேவராஜனும், யதிராஜனும்  இளையாழ்வாரின் 16-ஆவது வயதிலேயே தன் தந்தை பரமபதமடைய, அவர் ஸ்ரீபெரும்புதூரிலிருந்து தன் தாயார் மனைவியுடன் பெருமாள் கோயில் என்று அழைக்கப்படும் தேவப்பெருமாள் கோயிலின் கிழக்கு கோபுர வாசல் அருகில் குடிபுகுந்தார். அக்காலத்தில் திருபுட்குழியில் பிரபலமான அத்வைதச் சன்னியான யாதவபிரகாசரிடம் வேதாந்தம் பயிலச் சென்றார்.  இக்காலத்தில் இளையாழ்வார் திருக்கச்சி நம்பி என்ற பாகவதரின் நட்பு கிடைத்தது. நம்பி ஆளவந்தாரின் சிஷ்யர். அவர் பேரருளாளனிடம் பிரேமை கொண்டு ஆலவட்டக் கைங்கரியம் செய்துகொண்டு பெருமாளிடம் அந்தரங்கமாகத் தினமும் பேசிக்கொண்டு இருந்தார். இவரிடம் ஏற்பட்ட நட்பின் காரணமாக இளையாழ்வாருக்கும் தேவப் பெருமாளிடம் அன்பும் பக்தியும் வளர்ந்தது.  இளையாழ்வார் யாதவ பிரகாசரிடம் வேதாந்தப் பாடம் கற்கும் போது வைணவக் கொள்கைக்கு ஏற்காமல் சில வாக்கியங்களால் பிணக்கு ஏற்பட்டு, யாதவப்பிரகாசர் இளையாழ்வாரை கங்கையில் மூழ்கடிக்கச் சூழ்ச்சி செய்ய, அதிலிருந்து இரவோடு இரவாகத் தப்பிக்க, தேவப் பெருமாளும், பெருந்தேவி தாயாரும் வேடுவனாகவும், வேடுவச்சியாகவும் வந்த காப்பாற்றினார்கள். தாயாராக ...

(1) தேரோட்டிய யதுபதியும், வழிகாட்டிய யதிபதியும்

 (1) தேரோட்டிய யதுபதியும், வழிகாட்டிய யதிபதியும் ஸ்ரீராமானுஜருடைய தந்தை ஆசூரிகேசவ சோமயாஜி தம்பதிக்கு வெகு காலமாகப் புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது. ஒரு சமயம் அவர் திருவல்லிக்கேணிக்கு பெருமாளை சேவிக்க சென்றிருந்தார். அப்போது அங்கே ஸ்ரீ பார்த்தசாரதியை வணங்கி தனக்குப் பின் கைங்கரியத்துக்கு ஒரு புத்திரனை வேண்டி புத்திரகாமேஷ்டி யாகம் ஒன்றைச் செய்தார். பெருமாள் அவர் கனவில் தோன்றி “நாமே உமக்குப் புத்திரனாகப் பிறக்கிறோம்” என்பதை பிள்ளைலோகம் ஜீயர் ராமானுஜரின் சரித்திரத்தில் எடுத்துரைக்கிறார்.  பத்ம புராணத்தில் “இன்னும் நீண்ட காலத்திற்குப் பின்பு பகவானே உலகத்தில் ஒரு திரிதண்டி சந்நியாசியாக அவதாரம் செய்து தர்மத்தை நிலைநிறுத்துவான். அந்தத் திரிதண்டி சந்நியாச அவதாரம் செய்பவர் பாதராயணாருடைய உபதேசங்களையும், கீதார்த்தங்களையும் உபதேசிக்கும் அந்தத் தெய்வப் புருஷர் வியாச சூத்திரங்களுக்குப் பாஷ்யம் எழுதி உலகத்தைப் புரட்டு வாதங்களிலிருந்து மீட்டு உண்மைப் பாதைக்குத் திருப்புவார்” என்கிறது.  இராமானுச நூற்றந்தாதி வியாக்கியானத்தில் “அனந்த : ப்ரதமம் ரூபம் லக்ஷ்மநச்ச ததா: பரம் பலபத்ரஸ் த்ருத்யஸ...

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும்

செயற்கை நுண்ணறிவும் புத்தக வாசிப்பும் சமீபத்தில் செயற்கை நுண்ணறிவு வாசிப்பை அழிக்குமா? வளர்க்குமா? என்ற பட்டிமன்றத் தலைப்பு உரையாடலைப் பார்க்க நேர்ந்தது. 'வாசிப்பு’ என்ற வார்த்தையை முதலில் பார்த்துவிடலாம். வாசிப்பது, படிப்பது என்று இரண்டு வகையானது.  ரயிலில் பாக்கெட் நாவலை வாசித்தேன் என்பதற்கும் ‘பகவத்கீதையை’ படித்தேன் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது. ஒன்று casual reading இன்னொன்று serious reading. முதல் வகைப் பொழுதுபோக்கிற்காகப் படிப்பது. (இன்றைய பல தமிழ்ப் புத்தகங்கள் இந்த வகையைச் சார்ந்தது) அடுத்து ஆழ்ந்த வாசிப்பு வகையைச் சார்ந்தது. ’கம்பனும் ஆழ்வார்களும்’ (ம.பெ.சீனிவாசன்) போன்ற புத்தகங்கள் இதற்கு உதாரணம். இது போன்ற ஆ.வா புத்தகங்களைப் படிக்கும் போது, அவற்றிலிருந்து அதன் உட்பொருளை நம் அறிவாற்றல் மூலம் அறிவது மற்றுமல்லாது, அறிவைப் பெறுவதற்கான வழியும் கூட. இது மனிதனுக்கே மட்டும் உரித்தான செயல். செயற்கை நுண்ணறிவினால் இதைச் செய்ய முடியாது, அல்லது அதற்கு இன்னும் கொஞ்சம் காலம் ஆகலாம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும்.  ஆழ்வார் பாடல்களுக்கு உரைகள் பல இருக்க, பலர் என்னிடம் கேட்கும் கேள்...

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர் ( தமிழில் சுஜாதா தேசிகன்)

ராமாயணம் (Vol 1)- துஷ்யந்த் ஸ்ரீதர்  ( தமிழில் சுஜாதா தேசிகன்)  ஸ்ரீமத் ராமாயணம் ஓர் இதிகாசம். இதிகாசம் என்றால் ‘அப்படித்தான் இருந்தது’ என்று பொருள். அதனால் ராமர் இருந்தார் என்று நம்பப்படுகிறது இல்லை. ராமர் இருந்தார்.  ஸ்ரீமத் ராமாயணத்தை ஆழ்வார்களும், ஆசாரியார்கள் கொண்டாடியிருக்கிறார்கள். ‘கற்பார் இராமபிரானை அல்லால் மற்றும் கற்பரோ?’ என்ற நம்மாழ்வாரின் வாக்குக்கு ஏற்றார் போல், ஸ்ரீமத் ராமாயணத்தைக் கற்றுக்கொள்ள ஸ்ரீராமானுஜர் திருமலைக்குச் சென்றார். குலசேகர ஆழ்வார் மொத்த ராமாயணத்தையும் ’இன்தமிழில்’ சுருக்கமாக அருள, ஸ்வாமி தேசிகன் ரகுவீர கத்யம் என்ற அற்புதமான ஒன்றை நமக்குச் சமஸ்கிருதத்தில் அருளினார். கம்ப ராமாயணம் பற்றி உங்களுக்குத் தெரிந்த விஷயம். வடக்கே துளசிதாசர் என்ற மஹான் ’ராமசரிதமானஸ்’ (ராமரின் செயல்களால் தொகுத்து எழுதப்பட்ட ஏரி என்று பொருள்) என்று ஸ்ரீராமரின் செயல்களைத் தொகுத்து வழங்கினார். இப்படி ராமாயணத்தைப் பல விதமாக, பல மொழிகளில் நமக்குப் பலர் தந்துள்ளார்கள். எந்த மொழியில் எப்படி இருந்தாலும் அதில் ஸ்ரீராமர் குடிகொண்டிருக்கிறார்.  ஸ்ரீமத் ராமாயணத்துக்கு இன்னொரு...

ஆபாச சகிப்புத்தன்மை

ஆபாச சகிப்புத்தன்மை  முன்பு எப்போதோ படித்த நகைச்சுவை இது.  ஒருவர் கருப்பாக ஏதோ குடித்துக்கொண்டு இருக்க, பையன் ஓடி வந்து, "அப்பா, வீட்டுத் தண்ணீரில் சாக்கடை கலந்துவிட்டது குடிக்காதே! வயிற்றுக்கு ஏதாவது ஆகிவிடப் போகிறது!" என்று பதற, அப்பா கூலாக, “அப்படியா எனக்கு ஒன்றும் தெரியவில்லையே! நல்லா தானே இருக்கு!” என்பார். பையன் முழிக்க, அப்பா, “உங்க அம்மா போட்ட காபி என்று நினைத்தேன்” என்பார்.  இந்த அப்பாவைப் போலத் தான் இன்று தமிழ்நாட்டு மக்களும் இருக்கிறார்கள். நம் மீது சாக்கடையை வாரி அடித்தாலும் அதைத் துடைத்துக்கொள்ளக் கூட தயங்குகிறோம். சமீபத்தில் தமிழக ‘உயர்’ கல்வித்துரை அமைச்சர் சைவம், வைணவம் குறியீடுகளைப் பாலியல் தொழில் செய்பவர்களுடன் சம்பந்தம் படுத்திப் பேசியுள்ளார்கள். பெரியார் மண், திராவிட மாடல் ஆட்சி என்று கடந்த 50 ஆண்டுகளில் இந்தப் புண்ணிய பூமியில் பயிருக்குப் பதில் களைகள்‌ பூத்துக்குலுங்குகிறது. அமைச்சர் பேசியதற்குப் பெண்கள் குறித்து அமைச்சர் இப்படிப் பேசியிருக்கக் கூடாது போன்ற பொத்தாம் பொதுவான கண்டனங்களைச் சொல்லி கடந்துச்செல்கிறார்கள். சைவம், வைணவம் குறித்து இப்படிப் பேச...

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா !

ஸ்ரீராமர் - என் நண்பேன்டா ! உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே இடுக்கண் களைவதாம் நட்பு. நண்பன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இந்தக் குறளை எடுத்துக்காட்டாக நாம் பல காலமாகச் சொல்லிக்கொண்டு இருக்கிறோம்.  இப்படியொரு நண்பனைப் பார்ப்பதோ அல்லது இப்படியொரு நண்பனாகவோ இருப்பது அரிது. காரணம் சுயநலம்.    ’தோழன்’ என்ற சொல் நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஒரே ஓர் இடத்தில் மட்டும் தான் வருகிறது.  திருமங்கை ஆழ்வார் பாசுரம். பாசுரம் உங்களுக்குத் தெரிந்தது தான்.   ஏழை, ஏதலன் கீழ்மகன் என்னாது   இரங்கி மற்று அவற்கு இன் அருள் சுரந்து  மாழை மான் மட நோக்கி உன் தோழி   உம்பி எம்பி என்று ஒழிந்திலை  உகந்து  தோழன் நீ எனக்கு இங்கு ஒழி என்ற    சொற்கள் வந்து அடியேன் மனத்து இருந்திட  ஆழி வண்ண! நின் அடியிணை அடைந்தேன்    அணி பொழில் திருவரங்கத்து அம்மானே! குகன் தான் அறிவில்லாதவன், கொலைத்தொழில் புரிகின்றவன், நீச ஜாதியில் பிறந்தவன் என்று தன் தாழ்வுகளைச் சொல்ல நினைப்பதற்கு முன்பே, அவற்றை எல்லாம் என்னாது இரங்கி ஸ்ரீராமர்  ‘உகந்து தோழன் நீ எனக்...

பிச்சை - S, M, L, XL

பிச்சை - S, M, L, XL  ஸ்மால்  பொதுவாக நாம் காரில் செல்லும் போது, ஜன்னலுக்கு வெளியே பிச்சை கேட்பவர்கள் கையை உள்ளே நீட்ட அனுமதிப்பதில்லை. கண்ணாடியைக் கண் சிமிட்டுவது போல இறக்கி இரங்கிப் பிச்சைப் போடுவோம். காசுக்காக அவர்கள் நம் காரை துடைப்பதைக் கூட அருவருப்பு காரணமாக நிராகரிக்கிறோம். .  அதே போல் கோயிலில் பல பிச்சைக் காரர்கள் இருக்கும் போது ஒருவருக்குப் போட்டால் மொத்தக் கூட்டமும் நம்மை சூழ்ந்துகொண்டு பிச்சைக் கேட்பார்கள். அதைப் பல முறை நாம் தவிர்க்கவே விரும்புவோம்.  மீடியம்  சமீபத்திய  ஒரு YTபர் வீடியோ பண்டிகை பரிசாகத் துணிமணிகளை இலவசமாகக் கொடுக்க கூட்டம் எனக்கு உனக்கு என்று கையை வாகனத்துக்குள் நீட்டி வாங்குகிறார்கள். பொறுமையாக வாங்குங்கள், கையை உள்ளே நீட்டாதீர்கள் என்று அவர் சொல்ல இலவசத்தை எப்படியாவது வாங்கியே தீரவேண்டும் என்ற முனைப்பில் கூட்டம் முண்டியடிக்க என்ன செய்வது என்று தெரியாமல் 'அசிங்கமா பண்ணாதீங்க' ' கைய நீட்டாதீங்க’ என அவர் தன் வண்டியை வேகமாக ஓட்டிச் செல்கிறார்.   லார்ஜ் இலவச நோட்டீஸ் கொடுத்தாலே கையை நீட்டும் தமிழக மக்கள், ஒவ்வொரு தேர்தல் ...