சௌரிராஜனும் யதிராஜனும் ஒரு முறை ஸ்ரீராமானுஜர் தன் குரு யாதவ பிரகாசருக்கு எண்ணெய் தேய்த்துக்கொண்டிருந்தார். குருவின் தலையில் இதமாகத் தேய்த்துக்கொண்டு இருந்த சமயம், யாதவப் பிரகாசர் சாந்தோக்ய உபநிஷத்தில் வரும் "தஸ்ய யதா கப்யாஸம் புண்டரீகம் ஏவம் அக்ஷிணி" என்ற வாக்கியத்துக்குப் பொருள் சொல்லலானார். கப்யாஸம் என்கிற சொல்லை கபி ஆஸம் என்று இரண்டாகப் பிரித்தார். கபி என்றால் குரங்கு; ஆஸம் என்றால் அதன் பின்பகுதி. ஆகவே பகவானுடைய கண்கள் தாமரை போன்றது. அந்தக் கமலம் குரங்கின் பின்பகுதியைப் போலச் சிவந்து இருந்தன என்று விபரீதமாக அர்த்தம் சொன்னார். இதைக் கேட்டதும் ஸ்ரீராமானுஜர் கண்களிலிருந்து நீர் பெருக அவற்றில் சில துளிகள் யாதவப் பிரகாசர் தொடையில் பட, யாதவ பிரகாசர் ஏன் என்று கேட்க, அதற்கு ஸ்ரீராமானுஜர், "இதற்கு இப்படி அர்த்தம் செய்யக் கூடாது; சூரியனின் கதிர்களால் மலரச் செய்யப்பட்ட புண்டரீகம் தாமரை மலர்; அந்த மலரைப் போன்ற கண்களை உடையவன்" என்றார். பதிலைக் கேட்ட யாதவபிரகாசர் ‘ஆஸம்’ என்று கூறாமல், ராமானுஜர் மீது கோபம் கொண்டு, கொல்லவும் துணிந்தார் என்ற கதை உங்களுக்குத் தெரிந்திருக்கும். ம...